Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கயேஷ்பூர்: மேற்கு வங்காளத்தில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவரும், முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
தேர்தலுக்குப்பின் பா.ஜனதாவோ, காங்கிரசோ புதிய அரசை அமைக்கப்போவது இல்லை. அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைப்போம். இதற்காகவே நாங்கள் ஐக்கிய இந்திய முன்னணியை அமைத்து இருக்கிறோம். மோடி அரசை நாங்கள் வெளியேற்றுவோம்.